LATEST NEWS : கல்லறைக்குள் இருந்தாலும் நான் உயிரோடும் சக்தியோடும் இருப்பேன். நீ எங்கு இருந்தாலும் என்னை நினைத்தால் உன்னுடன் இருப்பேன்!
 
 
 
 ஷிரடி சாய்பாபா கோயிலில் இனி 'விஐபி பாஸ்'கள் செல்லாது. பல்வேறு சிறப்பு பூஜை மற்றும்  
More...
 
 
 
 
சீரிடி சாயிபாபா அற்புதங்கள்

வருக! வணக்கம்.

சீரிடி பாபா பக்தர்களுக்கு அருளிய, அருளிடும் அற்புதங்கள் இப்பக்கத்தில் வெளியிடப்படும்.

உங்களுக்கு  அல்லது  உங்களுக்கு வேண்டியவர்களுக்கு  பாபா நிகழ்த்திய அனுபவங்களை இப்பக்கத்தில் வெளியிட சுருக்கமாகவும் , சுவையாகவும் எழுதி அனுப்புங்கள்
.

பாபவின் கருணையால் மீண்டும்
பணிவாய்ப்பு பெற்றவரின்  அனுபவம்

   

சீரடியின் மண்ணில் கால் வைத்தவுடன் உன் கஷ்டங்கள் எல்லாம் தீரும்  என்று  உறுதியளித்திருக்கிறார் பாபா.  என் வாழ்வில்  அவரின்  இந்த  உறுதிமொழியை  உண்மையாக்கினார் . அதன் சுருக்கம் இங்கே


தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தருமபுரி மாவட்ட வளர்ச்சிக் கழகத்தினால் 27.01.1989 ஆம் ஆண்டு DROUGHT PRONE AREAS PROGRAMME (DPAP) ல்  நான் பணியமர்த்தப்பட்டேன். இப்பிரிவில் (DPAP) மொத்தம் என்னையும் சேர்த்து 6 evaluation staff பணியாற்றினோம்.


தருமபுரி மாவட்ட வளர்ச்சிக் கழகம் DPAP,  I.L.O Project ,STED Project  போன்ற திட்டங்களை செயல்படுத்தி வந்தது. தருமபுரி மாவட்ட வளர்ச்சிக் கழகத்தினால்  DPAPக்காக பணியமர்த்தப்பட்ட மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி அலுவலர்கள் 6 பேர்களையும் தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கழகம் செயல்படுத்தி வந்த வெவ்வேறு திட்டப் பணிகளுக்கு தேவைக்கேற்ப வெவ்வேறு காலக்கட்டங்களில் அவ்வப்போது மாறுதல் செய்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதன் அடிப்படையில் 1992ல் தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கழகம் என்னை STED Project ற்கு (அறிவியல் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்) மாறுதல் செய்தது.


தருமபுரி மாவட்ட வளர்ச்சிக் கழகம் செயல்படுத்தி வந்த DPAP திட்டத்தில் எனது ஜூனியர் உட்பட 4 Evaluation பணியாளர்களும், STED Project திட்டத்தில்  (என்னையும் சேர்த்து) 2 Evaluation பணியாளர்களுமாக பணியாற்றி வந்தோம்.


தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கழகம் செயல்படுத்தி வந்த DPAP திட்டத்திலிருந்து 4 Evaluation பணியாளர்களை வேறு மாவட்டங்களுக்கு  DEPLOY செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது என்னிடம் OPTION  கேட்காமல் அத்தருணத்தில் DPAP திட்டத்தில் பணியாற்றி வந்த (எனக்குப்பின் பணியில் சேர்ந்த எனது ஜூனியருடன்) 4 Evaluation பணியாளர்கள் மட்டும் பரிந்துரை செய்யப்பட்டதால் இந்த 4 பணியாளர்கள் மட்டும் G.O.M.SNO.257 AGRICULTURE (DPAP CELL) DEPARTMENT DATED 08.07.1996 ஆணையின்படி வேறு மாவட்டங்களுக்கு DEPLOY செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்ட வளர்ச்சிக் கழகம் செயல்படுத்தி வந்த STED Project திட்டத்திற்காக நானும், இன்னொரு Evaluation பணியாளரும் தருமபுரி மாவட்ட வளர்ச்சிக் கழகத்திலேயே தக்கவைத்துக் கொள்ளப்பட்டோம். தருமபுரி மாவட்ட வளர்ச்சிக் கழக நிர்வாகம் எடுத்த இந்த முடிவுக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்பதால் STED Project திட்டத்திலேயே எமது பணி தொடரலாயிற்று.


இந்நிலையில் தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கழகம் G.O.(MS)NO.14(SGSY) DEPT.DATED 21.01.2000 ஆணையின்படி கலைக்க உத்திரவிடப்பட்டது.


ஆனாலும் STED Project  (அறிவியல் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்) செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டம் முடிக்கப்பட்டதாக தெரிவித்து 11.03.2003 அன்று தருமபுரி மாவட்ட வளர்ச்சிக் கழகம் செயல்படுத்தி வந்த  STED Project  அறிவியல் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்திலிருந்து விடுவிக்கப்படும் ஆணை அப்போதைய கூடுதல்  ஆட்சியராக இருந்த திரு.பங்கஜ் குமார் பன்சால் அவர்களால் பிறப்பிக்கப்பட்டு முன்னறிவிப்பு எதுவுமின்றி திடீரென  வழங்கப்பட்டது.


STED Project  (அறிவியல் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்) நிறைவுற்றதால் என்னை அப்பணியிலிருந்து விடுவித்ததாக தருமபுரி மாவட்ட வளர்ச்சிக் கழகம் கூறியுள்ளது. ஆனால் STED  திட்டத்திற்காகவே (exclusively appointed for the STED Project) நியமிக்கப்பட்டவரை நிறைவு பெற்ற இத்திட்டத்திலிருந்து விடுவிக்காமல் பாரபட்சமாக நிர்வாகம் நடந்து கொண்டது.


வேலை ஏதும் இல்லாமலிருந்தும் கூட மாற்றுப்பணிக்கான ஆணை பெறப்படும் வரை தருமபுரி மாவட்ட வளர்ச்சிக் கழகத்தினால் நியமிக்கப்பட்ட Engineers பதவிகள் தொடர அனுமதித்து, சம்பளத்தையும் வழங்கி வந்துள்ளது தருமபுரி மாவட்ட வளர்ச்சிக் கழகம்.


STED  திட்டத்திற்காகவே (exclusively appointed for the STED Project) நியமிக்கப்பட்ட இதே அலுவலக இன்னொருவரை ஏற்கனவே இத்திட்டம் முடிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டபோதும், அவருக்கு வேலை ஏதும் இல்லாமல் இருந்தும் கூட மாற்றுப்பணிக்கான ஆணையை வேறு துறையிலிருந்து பெறும் வரை இத்திட்டத்திலிருந்து அவரை தருமபுரி மாவட்ட வளர்ச்சிக் கழகம். விடுவிக்கவில்லை.


என்னைத் தவிர தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கழகத்தின் பணியாளர்கள் யாரும் மாற்றுப்பணிக்கான ஆணை பெறும் வரை பணியிலிருந்து விடுவிக்கப்படவில்லை.


தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கழகத்தில் வெவ்வேறு பணிகள் மற்றும் திட்டங்களுக்காக வெவ்வேறு காலக்கட்டங்களில் பணியமர்த்தப்பட்ட அனைவருமே தங்கள் பதவிகளில் தருமபுரி மாவட்ட சமூகப் பொருளாதார மேம்பாட்டுச்சங்கம் அல்லது ஊரக வளர்ச்சித்துறை அல்லது வேறு துறைகளில் அயல் பணியில் தொடர்ந்தவாறு உள்ள நிலையில் பிற்போக்கான, பாரபட்சமான நடவடிக்கைகளால் எனது உரிமைகளை இழந்து நான் மட்டும் தனிமை படுத்தப்பட்டேன்.


தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கழக 60 பணியாளர்களில் எனக்கு மட்டுமே 12.03.2003 முதல் 5 வருடங்களுக்கு மேலாகியும் மாற்றுப்பணி வழங்கவில்லை. இதனால் பொருளாதார நெருக்கடிகளால் இயல்பான குடும்ப சூழ்நிலைகளும் பாதிக்கப்பட்டு, சமுதாயத்தின் சந்தேகமான பார்வையை சந்தித்து சங்கடப்படும் அளவிற்கு மன உளைச்சலும் ஏற்பட்டது.


2003 முதல் 2008 வரை சம்மந்தப்பட்ட அனைத்து நிலை அதிகாரிகளுக்கும்., பல விண்ணப்பங்கள் கடிதம் மூலமாகவும், மெயில் மூலமாகவும் விண்ணப்பித்தும் தீர்வு கிடைக்கவில்லை.


பசியின் கொடூரம் பசியை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். வலியின் வீரியம் வலியால் வதை பட்டவர்களாலேயே உணர முடியும்.


நியாயம் இருந்தும், மாற்றுப்பணி வழங்கிட வாய்ப்புகள் இருந்தும் அதிகாரிகள் மனசாட்சியும், மனிதாபிமானமும், பொறுப்பும் இல்லாமல்  எனக்கான பணிவாய்ப்பை தொடர்ந்து  நிராகரித்ததால்  எனக்கு மாற்றுப்பணி வழங்கப்படவில்லை என்பதை விட  அதிகார வர்க்கத்தினரின் ஆரோக்கியமற்ற முடிவுகள் என்னை மிகவும் பாதித்தன. என்னைவிட பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவருக்கு, அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்ற நிலையில் வாழுபவர்களுக்கு, இவரது வருமானத்தை மட்டும் நம்பி வாழும் குடும்பமாக இருந்து   இத்தகைய அநீதி தொடர்ந்து நீட்டிக்கப்பட்டால் அத்தகையவரின் நிலை என்ன?


மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்டுத்தான் எனக்கு நன்மை நடைபெற முடியும் என்று உணர்ந்ததால் எனது முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க செய்த பிரார்த்தனைகளின் பலனாக மனதுக்குள் ஓர் சக்தி வழிகாட்ட எனது மனம் பாபாவை நோக்கி நகர ஆரம்பித்தது.


பாபாவின் கருணையினால் 27.12.2008  அன்று பணியில் சேர்ந்து கொண்டேன்.


இதைப்பற்றிய விவரம் விரைவில் இப்பகுதியில் ......................

எனக்கு நடத்தப்பட்ட அநீதியின் விவரங்களை www.urvasanth.info  இணையதளத்தில் பார்வையிடலாம். தகுந்த ஆதாரங்களுக்காக  உண்மை ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளன.


பொய் பேசுபவனுக்கும், ஏமாற்றுபவனுக்கும் என்னுடைய பதில் காரமாக இருக்கும். உண்மையை பேசி அதை கடைப்பிடித்தால் நான் சரியான சமயத்தில் காப்பாற்ற முன் வருவேன். என்று  உறுதியளித்துள்ளார்   பாபா.


எனது பணி உரிமை சம்மந்தமாக  உயர் நீதிமன்றத்தின் மூலம்  தகுந்த ஆணை பெற வேண்டியுள்ளது.  அதிகார வர்க்கத்தினரின் ஆரோக்கியமற்ற, நியாயமற்ற  முடிவுகளால் எனக்கு மன தளவிலும்,  பொருளாதார ரீதியிலும்  ஏற்பட்ட பாதிப்புகளுக்கு  ஈடு செய்ய நீதிமன்றத்தின் ஆணை முக்கியமானதாக இருக்கிறது. உயர் நீதி மன்றத்தில் உரிய ஆணையைப் பெற்றுத்தர  மனிதாபிமானமும் திறமையும் நிறைந்த வழக்கறிஞர் நியாயமான கட்டணத்தில்  எனக்கு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாபாவிடம்  வைத்துள்ளேன். பாபாவின் பக்தரேயே எனக்கு வழக்கறிஞராக  கிடைக்கச்செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. பாபாவின் கருணையால் இத்தளத்தை பார்வையிடுவோர் மூலமாக கூட நல்ல வழக்கறிஞர் எனக்கு கிடைக்கலாம்.

 

பாபா சொல்கிறார் -


உன் விருப்பங்கள் எல்லாம் என்னிடம் உள்ளது. எதை வேண்டுமானாலும் கேள். ஆனால் நியாயமானதாக இருக்கட்டும். அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் எல்லா வகைகளிலும் முடித்து தருவேன். எப்படி என்று கேட்காதே. உன்னால் அறிந்து கொள்ள முடியாத வகையில்,கண்டுபிடிக்கமுடியாத வகையில் செய்து முடிப்பேன்.

 


Copyright © OurShirdibaba.com. All rights reserved