சீரடி சாய் பக்தர்களில் நீங்கள் அறிந்த நல்லவர்களையும் வல்லவர்களையும் பற்றி எழுதி அனுப்புங்கள். அவர் எத்துறையை சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். மருத்துவராக இருக்கலாம். வழக்கறிஞராக இருக்கலாம். பந்தா இல்லாத அரசு அதிகாரியாக இருக்கலாம். இப்பகுதிக்கு உங்களால் அறிமுகப்படுத்தப்படும் நல்லவர் - வல்லவர் எதனால் இவ்வாறு தங்களால் அங்கீகரிக்கப்பட்டார் என்ற விவரத்தை முக்கியமாக தெரிவியுங்கள். உங்களால் அறிமுகப்படுத்தப்படும் நல்லவர் - வல்லவர் சாய் பக்தர்களின் நியாயமான பிரச்சனைக்கு நம்பிக்கைக்கு உரிய தீர்வாளர்களாக இருக்கலாம்.